பிரதமர் மோடி கூறிய ‘தற்கொலை’ ஜோக்.! காங்கிரஸ் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

பிரதமர் மோடி கூறிய தற்கொலை ஜோக் குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளனர்.   

பிரதமர் மோடி டெல்லியில் காணொளி காட்சி வாயிலாக மக்கள் மத்தியில் பேசுகையில், ஓர் நகைச்சுவை  பதிவு ஒன்றை கூறினார். அவர் கூறுகையில், தாங்கள் சிறு வயதில் ஒரு ஜோக் கேட்போம். அதாவது, ஒரு ஊரில் ஒரு பேராசிரியர் இருப்பார்.  பேராசிரியர் மகள் , தனக்கு மிக மன சோர்வாக இருக்கிறது. அதனால் கங்காரியா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்.

அந்த சமயம் மகள் எழுதிய கடிதத்தை பார்த்த பேராசிரியர் கடும் கோபமடைவார். அப்போது அந்த பேராசிரியர், நான் எத்தனை முறை சொல்லி கொடுத்து இருப்பேன். மீண்டும் கங்காரியா ஆற்றின் பெயரை தவறாக எழுதிவிட்டாள் என கூறினார் என பிரதமர் மோடி கூறியதும் பலரும் சிரித்து விட்டனர்.

இந்த ‘தற்கொலை’ ஜோக் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், தற்கொலையால் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள், குழந்தைகளை இழக்கின்றனர் என்றும், அவர்களை பிரதமர் மோடி கேலி செய்ய வேண்டாம் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அதிக தற்கொலை எண்ணிக்கை ஒரு சோகம் என்றும் அது நகைச்சுவை அல்ல என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

4 hours ago