அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்.!!

Published by
பால முருகன்

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 2 வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாகல்கோட்டில் பிரச்சாரம் செய்து வந்தார்.

அந்த பிரச்சாரத்தின், போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும் வாரிசு அரசியலும் வரும். மத கலவரங்களும் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி என்பது பின்னோக்கியதாகிவிடும்” என பேசி இருந்தார்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமிஷ்தா தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியது வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் தற்போது புகார் அளித்துள்ளனர். மேலும்,  அமித்ஷா சாதி, மத மோதலை தூண்டும் விதமாக பேசி கர்நாடகாவின் அமைதியை குலைக்கிறார் என காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், ரந்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் புகார் கூறியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

56 minutes ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

1 hour ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago