நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கௌதம் அதானிக்கு, இந்தியாவிலுள்ள 3 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அதானி நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, தொழிலதிபர் அதானிக்கு பிரதமர் மோடி சரியான பரிசை ரகசியமாக காதலர் தினத்தன்று அளித்துள்ளார் என தெரிவித்துள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…