Categories: இந்தியா

காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி.. 129 இடங்களில் முன்னிலை – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக தேர்தலில் கல்கட்கி மற்றும் தார்வாட் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஆரம்ப முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால், கர்நாடகாவில், காங்கிரஸ் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக கோட்டையை காங்கிரஸ் தகர்த்துள்ளது என்றும் கூறலாம்.

இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார். இதுபோன்று, தார்வாட் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குல்கர்னி 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் வெற்றி பெற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் மாநில தலைவர் டிகே.சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 129 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பாஜக 66 இடங்களில் முன்னிலை பெற்று, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, கர்நாடகா தேர்தலில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியானது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

6 minutes ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

52 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago