Categories: இந்தியா

தொடர் வன்முறை: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா?

Published by
பாலா கலியமூர்த்தி

மணிப்பூரில் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2 மாதங்களாக அங்கு  வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதுவரை மணிப்பூர் கலவரத்தில் 133 பேர் உயிரிழந்ததாகவும், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில், கடந்த 2 நாட்களாக அமைதி நிலவி வந்த மணிப்பூரில், நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது.

நேற்று, கங்போக்பி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், தலைநகர் இம்பாலில் பாஜக அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இம்பாலில் உள்ள மருத்துவமனை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய,  அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

7 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

50 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago