தொடரும் சர்ச்சை: பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்கின் பேஸ்புக் கணக்கு அதிரடி நீக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், ஃபேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்.

தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் மதவிரோதத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வை பரப்பும் கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்கள் குறித்தும், ரோஹிங்கியா அகதிகளை சுட்டுத் தள்ளவேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் தளத்தில் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் ஈடுபட்டதாலும், எங்கள் கொள்கையை மீறியதற்காகவும் நாங்கள் ராஜா சிங்கின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்துள்ளோம்.

மேலும், பேஸ்புக்கில் விதிமுறைகளை மீறுபவர்களை ஆய்வு செய்யும் பணி விரிவானது. அந்த முடிவுக்கு தற்போது இது சென்றுள்ளது. 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட இந்தியாவை மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக பேஸ்புக் கருதுகிறது. பேஸ்புக்கின் கொள்கைகள் இந்தியாவில் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியதையடுத்து, தற்போது புலன் விசாணையில் உள்ளது. ஃபேஸ்புக்கில் மட்டும் ராஜா சிங்கிற்கு 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

இப்போது ராஜா சிங் கணக்கு முற்றிலும் நீக்கப்பட்டதால் அவரின் எந்த பதிவையும் இனிமேல் காண முடியாது என்று தெரிவித்துள்ளார்.  இதனிடையே, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், சமூக ஊடக தளத்தின் ஊழியர்கள் தொடர்ச்சியான தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு அரசியல் முன்னோக்கிலிருந்து மக்களை ஆதரிப்பதாகவும், பிரதமர் மற்றும் மூத்த அமைச்சரவை அமைச்சர்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, பேஸ்புக் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுமப்பட்டதை அடுத்து நேற்று ஆஜராகி சுமார் 5மணி நேரம்  பேச்சுவார்த்தை நடைபெற்றது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

1 hour ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

2 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

3 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

3 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

4 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

4 hours ago