மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் ரூ.450-க்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
“ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 65 லட்சம் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 3.70 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. 80 லட்சம் ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித் தந்தது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 82 லட்சம் சகோதரிகள் பயனடைந்துள்ளனர்.
மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் காஸ் விலை என்னவாக இருந்தாலும் சிலிண்டர் ரூ.450க்கு வழங்கப்படும்.36 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். மோடி அரசு அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளது. 200 கோடி தடுப்பூசிகளை போட்டு மக்களை கொரோனாவில் இருந்து காக்கும் பணியை மோடி ஜி செய்துள்ளார்” என தெரிவித்தார்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…