மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றது.இதன்விளைவாக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகத்தில் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.அப்பொழுது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாணவர்கள் போராட்டத்தின் போது கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த டெல்லி போலீசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவுள்ளோம்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…