[Image source : REUTERS]
சிக்னல் பிரச்னையால் கோரமண்டல் விரைவு ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது என தகவல்.
ஒடிசாவில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் பலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிக்னல் காரணமாக தான் விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் விபத்தில், கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததால் தான் ஓட்டுநர் ரயிலை இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகமான 130 கிமீ வேகத்தை விட 128 கிமீ வேகத்திலேயே ரயில் சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் லூப் லைனிற்குள் கோரமண்டல் விரைவு ரயில் நுழைந்தது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் தான் கோரமண்டல் விரைவு ரயில் மோதியது எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…