பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா..72 குடும்பங்கள் தனிமை.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் மால்வியா நகர் பகுதியில் உள்ள 19 வயதான பீட்சா டெலிவரி நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக அம்மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அவருடன் பணிபுரியும் 16 நபர்களை கடையில் தனிமைப்படுத்த முடிவு செய்தனர். மேலும் கடையின் மூலம் உணவு வழங்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் அடையாளம் காணும் பணி தற்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் பீட்சா டெலிவரி செய்யப்பட்ட 72 குடும்பங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சுய தனிமைப்படுத்தப்பட்டன. அந்த பீட்சா நபர் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை பணியில் இருந்து பீட்சாக்களை வீடுகளுக்கு வழங்கியுள்ளார். பின்னர் கடந்த 15 நாட்களில் அந்த நபர் தெற்கு டெல்லி பகுதிகளான ஹவுஸ் காஸ், மால்வியா நகர் மற்றும் சாவித்ரி நகர் போன்ற பகுதிகளில் சுமார் 72 குடும்பங்களுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டெலிவரி நபருக்கு ஏற்பட்ட தொற்றால் அந்த குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டன.
மேலும் டெலிவரி செய்யும் நபர்கள் அனைவரும் முககவசங்களைப் பயன்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் தெரிவித்துள்ளதால், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து தொடர்பு நபர்களையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும் முடிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட பீட்சா டெலிவரி நபர் இப்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் அவரது தொடர்பில் இருந்து வந்த மற்றவர்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

4 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

5 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

6 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

7 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

8 hours ago