கேரள கலெக்டரிடம் பேட்டி கண்ட பிரபல தொலைக்காட்சி நிருபரை தாக்கிய கொரோனா!

Published by
லீனா

கேரள கலெக்டரிடம் பேட்டி கண்ட பிரபல தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா தொற்று.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, கேரளாவில் காசர்கோடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சஜித் பாபு.  கடந்த 19ந் தேதி இவரிடம் பிரபல தொலைக்காட்சி சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளார்.

இந்நிலையில், இவரிடம் பேட்டி எடுத்த நிருபருக்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் காசர்கோடு ஆட்சியர் பாபுவை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.   மேலும், அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இதனையடுத்து, நிருபருடன் பணிபுரிந்த புகைப்படக்காரர், வாகன ஓட்டுனர் மற்றும் 2 பணியாளர்கள் என 4 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495-ஆக உயர்ந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

2 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

3 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago