டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பணிபுரிந்து வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு தலைமை கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போலீஸ் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய காரணங்களை தீவிர மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் மும்பை கடற்படை தளத்தில் பணிபுரிந்து வந்த வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தொடர்பில் இருந்த அனைவரும் அந்தந்த இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை 26,496 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 824 ஆகவும் உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,804 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…