கேரள மாநிலத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1150 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் குறைய தொடங்கிய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1088 லிருந்து 1150 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 62 பேரில் 33 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 23 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் 7 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, கேரளாவில் 577 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் வீடு மற்றும் மருத்துவமனை கண்காணிப்பில் மொத்தம் 124167 பேர் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…