கேரள மாநிலத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1150 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் குறைய தொடங்கிய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1088 லிருந்து 1150 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 62 பேரில் 33 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 23 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் 7 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, கேரளாவில் 577 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் வீடு மற்றும் மருத்துவமனை கண்காணிப்பில் மொத்தம் 124167 பேர் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…