உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,370 ஆகவும், பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். மேலும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது. இந்த நிலையில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் பல ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தாய் இறந்த செய்தி கேட்டும் பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரியின் கதை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் துப்பரவு பொறுப்பாளராக இருக்கிறார். இவரை போபால் பகுதிகளுக்கு உட்பட வீடுகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து கஷ்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, தொடர்ந்து பணியாற்றி முடிந்த பிறகே தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவரின் தாயை விட மதிப்புமிக்க எதுவுமில்லை. ஆனால் தாயிக்கு அடுத்து தாய் நாடு என்றும் காலை 8 மணியளவில் தாயின் இறப்பு குறித்த தகவல் அறிந்தேன். இறுதி சடங்கிற்கு மதியம் சென்று விட்டு, மீண்டும் பணிக்கு வந்துவிட்டேன் என தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…