கொரோனா எதிரொலி..இண்டிகோ விமான நிறுவனத்தில் 10% ஆட்குறைப்பு..!

Published by
murugan

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள துறையாக இருப்பது விமான போக்குவரத்து துறைதான்.  உள்ளூர் மற்றும் வெளிநாடு சேவை அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

விமானத்துறை இயங்காமல் இருப்பதால் இத்தறையில் உள்ள   ஊழியர்களுக்கு  சம்பளக்குறைப்பு மற்றும் பணிநீக்கம்,  போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள இண்டிகோ விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 10% பேரை நீக்க  இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து இண்டிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், கொரோனா காலத்திலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத ஊதியத்தை உலகளவில் வழங்கிய நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. நிலையான செலவுகள் விமான நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரை அதிகம் என்றும், ஊரடங்கு போது இண்டிகோ ஒரு நாளைக்கு ரூ .40 கோடி செலவழிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 தனது பணியாளர்களிடமிருந்து ஊதியத்தை குறைத்திருந்தாலும், வருவாயின் வீழ்ச்சியை ஈடுசெய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் அவர் கூறினார். மார்ச் 2019 நிலவரப்படி, இண்டிகோவில் 23,531 ஊழியர்கள் இருந்தனர். இண்டிகோவைத் தவிர, ஏர் இந்தியா, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட அனைத்து நிறுவங்களும் செலவுகளைக் குறைக்க இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

20 minutes ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

37 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

2 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

17 hours ago