இன்று கொச்சியில் மலையாள திரையுலகம் அமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை கேரளாவில் தியேட்டர்கள் அனைத்தும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இத்தாலியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து நேற்று கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த குழந்தை பெற்றோருடன் இத்தாலி சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் கே.கே.ஷைலஜா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் பத்தினம் திட்டா மாவட்டம் மூன்று நாட்களுக்கு விடுமுறை என கலெக்டர் நூஹூ நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…