இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 63 மற்றும் கேரளாவில் 40 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த 12 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கண்ணூர் 3, காசராகோடு 6, எர்ணாகுளம் 3 என மொத்தம் 12 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசாங்கம் சொல்லவதை மக்கள் பின்பற்றாமல் கூட்டமாக கூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது என்று இருந்தால் 144 தடை அறிவிக்க கூட தயங்கமாட்டோம் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…