இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை மோசமாக தாக்கி வருகிறது. இது கொரோனா முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,40,46,809 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,44,776 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், இதுவரை 2,00,79,599 பேர் வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் தற்போது 37,04,893 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் 17,92,98,584 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…