அரசு மருத்துவனை மாற்றி -கொரோனா சிகிச்சை மையமாக முதல்வர் மம்தா அதிரடி அறிவிப்பு

Published by
kavitha

உலகம் முழுவதும் தனது கொரத்தொற்றால் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொரத்தை காட்ட துவங்கி உள்ளது.அதன்படி இந்தியாவில் மட்டும் இந்த வைரஸிற்கு 500க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.11 பேர் பலியாகி உள்ளனர்.இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் இன்று நள்ளிரவில் உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் பாதிப்பு மற்றும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் தலா 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அதில்  ஒருவர் இறந்துள்ளார். அங்கு கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய அம்மாநில அரசு கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கும்,அந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையை கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக உடனடியாக மாற்றி முதல்வர் மம்தா உத்தவிட்டுள்ளார்.இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவிக்கையில் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றுகிறோம். இதனால் அந்த மருத்துவமனைக்கு புதிதாக நோயாளிகள் யாரையும் சேர்க்கவில்லை. ஏற்கனவே சிகிச்சை பெற்றுவருகின்ற நோயாளிகளை தற்போது வீட்டுக்கு அனுப்பி வருகிறோம். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் கர்ப்பணிப் பெண்களை தக்க பாதுக்காப்போடு மாற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.கொரோனா தடுப்பிற்காக மாற்றியமைக்கப்பட்டைம் இந்த மருத்துவமனையில் 2,200 படுக்கைகள் உள்ளன. இதனை முழுமையாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், சுய தனிமைக்காக வருவோருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும்வைரஸைத் தடுக்கும் எங்களின் முயற்சியில் இது முக்கியமான ஒன்றாகும் என்று இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

20 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago