கொரோனா பரிசோதனை கூடத்தில் உருவானது – நிதின் கட்கரி பரபரப்பு தகவல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதில்லை என்றும் அது ஆய்வு கூடத்தில் உருவானது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். 

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கி, சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதனால். கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்’ என்று அழைத்து வந்தார். சீனா செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த உலகமும் தற்போது தண்டனையை அனுபவித்து வருகின்றன என்றும் கூறி, சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கயிருந்த நிதியை நிறுத்திவைக்கப்படுவதாக எச்சரித்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்றும் செயற்கையான முறையில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த கொடிய வைரசால் தற்போது பல நாடுகளை பாதித்துள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்களர்கள் இறங்கியுள்ளார்கள் என்றும் அதைத் தடுக்கும் மருந்து தற்போது ஏதும் இல்லை என கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து முழுமையாக வெளியே வர முடியும். இதனால் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஆனால் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். எனவே, நாம் கொரோனா வைரஸுடன் வாழும் நிலையை பழகிக்கொள்ள வேண்டும். மேலும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

17 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

59 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago