உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இன்று ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில் லக்னோவில் அதிகபட்சமாக 196 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டாவது மிக அதிகமான கொரோனா தொற்று காசியாபாத்தில் 149 ஆகவும், புத்த நகர் மாவட்டத்தில் 115 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,627 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இறப்புகளின் எண்ணிக்கை 827 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 இறப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தற்போது உத்தரபிரதேசத்தில் 9,514 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் காசியாபாத்தில் அதிகபட்சமாக 1,390 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன்பின்னர் நொய்டாவில் 1,121 பேர், லக்னோவில் 718 பேர் மற்றும் கான்பூரில் 412 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்பு முகக்கவசம் அணியாததற்காக அபராதம் ரூ .100 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிர்த்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…