இந்த ஆண்டு கார்பன் வெளியேற்றத்தை கொரோனா ஊரடங்கு 8 சதவீதம் அளவுக்குக் குறைத்து இருக்கலாம் என சுற்றுச்சூழல் துறை அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிந்தைய வணிக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இணை செயலாளர் சுஜித்குமார் வாஜ்பாய் அவர்கள் பேசும்பொழுது, கொரோனா மிகப்பெரிய சவால்களை அளித்துள்ளதாகவும், பொருளாதாரத்தை தொடங்குவதற்கும் புதிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் அன்றாட வாழ்விலும் சுற்றியுள்ள இயற்கை மற்றும் மற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருவதை நாம் உணர வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கார்பன் வெளியேற்றத்தை நடப்பாண்டில் 8 சதவீதம் வரை குறைக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. பல காரணங்களால் நாம் உயிரினங்களை இழந்து வருகிறோ,ம் பல அழிந்து விட்டது இது சுற்றுச் சூழல் அமைப்பை சீர்குலைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…