ஜூலை 4 முதல் கொரோனா மூன்றாம் அலை …. ஹைதராபாத் விஞ்ஞானி!

Published by
Rebekal

ஜூலை 4 ஆம் தேதி முதலே கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாக ஹைதராபாத் விஞ்ஞானி விபின் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிக அளவில் பரவ தொடங்கியது. இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்த நிலையில், தற்போது தான் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை விரைவில் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கலாம் என ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

463 நாட்களில் நாட்டில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்வதற்கான சிறப்பு வழியை உருவாக்கிய மருத்துவர் விபின் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது போல, ஜூலை 4-ஆம் தேதியே நாட்டில் மூன்றாம் அலை தொடங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

5 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

6 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

7 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

7 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

8 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

9 hours ago