கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனதின் குழு எச்சரிக்கை.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கமே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு பற்றி பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் சிலா் எச்சரித்துள்ளனா்.
ஆகவே, மருத்துவமனைகளில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகளை வலுப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது அலை உச்சம் தொட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள சமீபத்திய அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் குழுவினர், கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருகிறது.
தற்போதைய சூழலில் அனைத்து மாநிலங்களும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நிபுணர் குழு, கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலையில் இருக்க கூடும் என கணித்துள்ளது.
எனவே, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறிய நிபுணர் குழு, மருத்துவமனைகளில் போதிய படுக்ககைகள், ஆக்சிஜன் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…