கொரோனா மூன்றாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது – மத்திய சுகாதார அமைச்சக உயரதிகாரி!

Published by
Rebekal

கொரோனா மூன்றாம் அலையால் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அவர்கள் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் நாடு முழுவதும் இதுவரையில் 2.2 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் 97% மக்களை பாதுகாப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும், நாம் பாதுகாப்பு அம்சங்களை கைவிட்டுவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றினாலே மூன்றாவது அலை வந்தாலும் அது சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசித் திட்டத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களில் தடுப்பூசி தொடர்பான தயக்கம்தான் முக்கியமானதாக இருப்பதாகவும், தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகள் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாக கூறப்பட்ட கூடிய தகவல் காரணமாக பல கிராமப்புறங்களில் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வசிக்க கூடியவர்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை உடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை சமூகத்திற்கு நினைவு படுத்துவது முக்கியம் எனவும், இதன் மூலம்தான் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago