கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர் .அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கெடுத்து , நவம்பர் 20-ம் தேதி கோவாக்ஸின் அவரது உடலில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தற்போது 67 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் , எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ,என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்…
மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…