கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புள்ளாகியதுடன், 300க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 627,168 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 18,225 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 21,948 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 377 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை 379,902 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 229,041 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் குறைய வேண்டுமானால், நாம் வீட்டில் இருப்போம், தனித்து இருப்போம், விழித்திருப்போம்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…