மகாராஷ்ராவில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட மத்திய ஆயுத காவல் படையை அனுப்பி வைக்க கோரிக்கை….

Published by
Kaliraj

மகாராஷ்ராவில் கடந்த மார்ச்  25 முதல் காவல்துறையினர் அயராது பொது ஊரடங்கை நிலைநாட்ட அதிக வேலை செய்து வரும் நிலையில்  அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டியுள்ளதால் மத்திய ஆயுதப்படை காவலர்களை அனுப்பி வைக்கமாறு மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டிரா. இங்கு 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே  ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் அம்மாநில காவல்துறையினர்  கடுமையாக பணியாற்றி வருகின்றனர். பணியில் இருந்த பல காவலர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் சிலர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதனால் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் பணிக்கு வரவேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஏற்கனவே மாநில காவல்துறையினருடன் 32 கம்பெனி  மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈத் பண்டிகை நெருங்குவதால் சட்டம் ஒழுங்கை காக்க கூடுதலாக 20 கம்பெனி மத்திய ஆயுத காவல் படையை (சி.ஏ.பி.எப்) அனுப்பி வைக்குமாறு மத்திய அரசிடம், மகாராஷ்ட்ர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

57 minutes ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

1 hour ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

2 hours ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

2 hours ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

3 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

3 hours ago