ManishSisodia [Image Source : PTI]
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மீ கட்சித்தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரது நீதிமன்ற காவல் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டதோடு, படிக்கும் நோக்கத்திற்காக அவருக்கு நாற்காலி மற்றும் மேஜை வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…