Categories: இந்தியா

மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு..!

Published by
செந்தில்குமார்

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மீ கட்சித்தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரது நீதிமன்ற காவல் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டதோடு, படிக்கும் நோக்கத்திற்காக அவருக்கு நாற்காலி மற்றும் மேஜை வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago