கோவாக்சின் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரநா வைரஸில் இருந்து பாதுகாக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் தடுப்ப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பு மருந்தானது தற்போது தீவிரமாக பரவி வரும் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரோனா வைரஸில் இருந்தும் பாதுகாக்கும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், கோவாக்சின் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரநா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளதாகவும், மேலும் இங்கிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் எதிராகவும் கோவாக்சின் தடுப்பு மருந்து செயல்படும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…