கோவாக்சின் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரநா வைரஸில் இருந்து பாதுகாக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் தடுப்ப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பு மருந்தானது தற்போது தீவிரமாக பரவி வரும் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரோனா வைரஸில் இருந்தும் பாதுகாக்கும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், கோவாக்சின் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரநா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளதாகவும், மேலும் இங்கிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் எதிராகவும் கோவாக்சின் தடுப்பு மருந்து செயல்படும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…