கேரள மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 59,690 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. 5,949 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
அதேநேரத்தில், மாநிலத்தில் இதுவரை 6,01,861 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, 60,029 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்[பாத்து குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது இது மூன்றாவது மாநிலமாக கேரளா திகழ்கிறது.
இந்த தடுப்பூசி தயாரானதும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதேபோல், மத்திய பிரதேசமும் அக்டோபர் இறுதியில் இலவச தடுப்பூசி அறிவித்தது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…