Mumbai sessions court [Representational Photo : iStock]
பாலியல் தொழிலை பொது இடத்தில் செய்தால் மட்டுமே குற்றம் என கூறலாம் என்று மும்பை நீதிமன்றம் கருத்து.
மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் 34 வயதான பெண் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, புறநகர் முலுண்டில் உள்ள விபச்சார விடுதியில் சோதனை நடத்தியதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் அந்த பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த பெண்ணை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுருந்தார்.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மும்பையில் உள்ள தங்குமிடம் இல்லத்தில் ஒரு வருடத்திற்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுதொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டப்படி, பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறு கிடையாது.
பொது இடத்தில் பிறருக்கு இடையூறு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவது தான் குற்றம் என தெரிவித்தனர். அந்த பெண் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடவில்லை, ஒரு மேஜர் என்பதால் தொழில் செய்ய அவளுக்கு உரிமை உண்டு. அந்தப் பெண் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இதேபோன்ற ஒரு வேலையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவரை காவலில் வைப்பது முறையல்ல என்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அவர்களுக்கு நிச்சயமாக அவர்களின் தாய் தேவை, மற்றும் பாதிக்கப்பட்ட பெண் அவரது விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டால், அது நிச்சயமாக இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமையை பறிக்கும் நிலையை உருவாக்கும். பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றமல்ல, ஆனால் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் ஈடுபடுவதை குற்றம் என்று கூறலாம்.
எனவே, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்குமாறு உத்தரவிட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சி.வி.பாட்டீல், நாட்டில் சுதந்திரமாக நடமாட அடிப்படை உரிமை உள்ளதாக தெரிவித்து, அந்த பெண்ணை வீட்டு காவலில் அடைத்து வைக்குமாறு கூறிய மாஜிஸ்ட்ரேட் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…