தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் மேலும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் மாலை 6 மணிக்கு முன்னதாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட வேண்டும்.
மேலும் ஊரடங்கை மீறி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே தெலுங்கானாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1096 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் 49,391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,694 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49,391 பேரில் 14,183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…