மேற்கு வங்கத்தில் மே-30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Published by
லீனா

மேற்கு வங்கத்தில் மே-30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் எவற்றிற்கெல்லாம் அனுமதி, எவற்றிற்கெல்லாம் அனுமதி கிடையாது என்பது பற்றி பார்ப்போம்.

  • அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கும்.
  • அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.
  • அத்தியாவசிய அவசர சேவைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • ஷாப்பிங் வளாகங்கள், உணவகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • சில்லறைக் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும்.
  • பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
  • மருத்துவ சார்ந்த கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும்.
  • பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்.
  • மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில் மற்றும் பேருந்துகளில், அவசர மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தனியார் கார்கள் மற்றும் டாக்சிகள் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மெட்ரோ சேவை, அவசரகால சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • அனைத்து அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார மத கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பேக்கேஜிங் சேவைகள் தவிர, அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி பிரிவுகள் மூடப்பட்டிருக்கும்.
Published by
லீனா

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

38 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago