மகாராஷ்டிரா அரசு நேற்று ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது. மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சில தளர்வுகளை இந்த உத்தரவில் அளிக்கப்பட்டுள்ளது .
அன்லாக் 3 வழிகாட்டுதல்கள் நேற்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. உத்தரவுப்படி, சினிமா அரங்குகள், , நீதிமன்றங்கள் மற்றும் உணவகங்கள் இல்லாத மால்கள் மற்றும் சந்தை வளாகங்கள் ஆகஸ்ட் 5 முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். முக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும்.
அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் . ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், வெளிப்புற பூப்பந்து மற்றும் அணி அல்லாத விளையாட்டுக்கள் உடல் ரீதியான தூரத்தோடு அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 298 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 14,463 ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 2,39,755 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 59.84 சதவீதமாக உள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…