இந்தியாவில் பாதிப்பு 21,700 ஆகவும், பலி எண்ணிக்கை 686 ஆகவும் அதிகரிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா என்ற கோவிட் 19 வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மனதிற்கு சற்று மகிழ்ச்சியை தருகிறது. இதுவரை 4,325 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,652 பேர் பாதிக்கப்பட்டு, 269 பேர் பலியாகியுள்ளனர். 789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 2,407, டெல்லியில் 2,248, ராஜஸ்தானில் 1,890, மத்திய பிரதேசத்தில் 1,695, தமிழ்நாட்டில் 1,629 மற்றும் உத்தரபிரதேசத்தில் 1,509 பேர் என அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உலகளவில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 26,58,794 பேர் பாதிக்கப்பட்டு, 1,85,440 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பின்னர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,30,024 பேர் குணமடைந்துள்ளார்கள். உலகளவில் அதிகப்படியாக அமெரிக்காவில் 8,49,092 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 47,684 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago