பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

Published by
Edison

பி.எப் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக,மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித்துறை தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ்,கடந்த ஆண்டு மே 3 ம் தேதி மத்திய அரசானது,ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.இந்த அறிவிப்பின் படி,ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன்(யுஏஎன் எண்) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு,ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்களின் பி.எப். கணக்கில் செலுத்தப்படும் தொகையானது,வரவு வைக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.இந்த நடைமுறையானது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில்,பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) அறிவித்துள்ளது.
எனவே,இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள்  http://www.epfindia.gov.in/site_en/index.php என்ற லிங்க் மூலமாக,உடனடியாக பி.எப். கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம்.
Published by
Edison

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

13 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

33 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

1 hour ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago