தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் தற்பொழுது நிவர் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மிக கன மழையும் புயலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அச்சமயம் புயல் காற்றின் வேகம் மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதி மற்றும் உறுதியற்ற வீடுகளில் வசிக்கக்கூடிய மக்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாமுக்கு செல்லுமாறும், முக்கியமான ஆவணங்களை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுமாறும் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சுத்தமான குடிநீர் இருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை,
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…