அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் மருத்துவர்களின் கவனக்குறைவால் துணி இருந்ததால் பெண் உயிரிழப்பு.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது கணவர் அழைத்துச் சென்று வயிற்றுவலி குறித்து கூறிய போது பெண்ணின் வயிற்றுக்குள் ஒரு துணி இருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தை பெற்ற பொழுது நடைபெற்ற அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கவனக்குறைவாக துணியை வயிற்றுக்குள்ளேயே விட்டுள்ளனர். இதனால் தான் அந்த பெண்ணுக்கு தொடர் வயிறு வலி இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து இந்தத் துணி மீண்டும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்ட நிலையில், இந்த பெண் மிகுந்த உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் தில்ஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…