pm modi sad [Image source : file image ]
மைசூர் தசரா கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகித்து வந்த கஜராஜா பலராமா என்கிற யானை உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் காசநோய் காரணமாக நேற்று உயிரிழந்தது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி பலராமனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இந்த சம்பவத்தால் தான் வருத்தம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது ” பல ஆண்டுகளாக, மைசூரில் நடந்த தசரா கொண்டாட்டங்களில் கஜராஜா பலராமா முக்கிய அங்கமாக இருந்தார். மா சாமூண்டீஸ்வரியை சுமந்து வந்த அந்த யானையை மக்கள் அன்புடன் நினைத்துப் பார்க்கிறார்கள். இந்த மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி!’ என பதிவிட்டுள்ளார்.
மறைந்த கஜராஜா பலராமா யானை 1958 இல் பிறந்தது. இது, மைசூர் தசரா விழாவில் கிட்டத்தட்ட 13 முறை தங்க ஹவுடாவை ஏந்திச் சென்றுள்ளது. மேலும், இந்த யானை கர்நாடகாவின் நாகர்ஹோலே புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் வசித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…