“ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமம்”- அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

Published by
Edison

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமமாகக் கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதனால்,கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது.ஏனெனில்,கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறப்பதை விட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் முறையான சிகிச்சை கிடைக்காமல் இறப்பவர்களே அதிகமாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலரால் பல்வேறு பொதுநல வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமையன்று விசாரித்த அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அஜித்குமார் மற்றும் சித்தார்த் வர்மா ஆகியோர், “மருத்துவமனைகளுக்கு  தேவைப்படும் ஆக்ஸிஜனை கொடுக்காமல் இருப்பது ஒரு குற்றச் செயலாகும். மேலும்,ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் இறப்பது  ஒரு ‘இனப்படுகொலைக்கு சமமாகக்’ கருதப்படும்.

ஏனெனில்,விஞ்ஞானம் மிகவும் முன்னேறியிருக்கும் போது, இந்த நாட்களில் இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளை அறுவை சிகிச்சை கூட உடனடியாக நடைபெறுகையில்,ஆக்சிஜன் இல்லாமல் மக்களை எப்படி இறக்க அனுமதிக்க முடியும்.

எனவே,ஆக்சிஜன் கொடுக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் மற்றும் அரசு நிர்வாகமும்  இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று உத்தரவிட்டுள்ளனர்.

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

5 minutes ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

26 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

29 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago