இறந்த பிரியங்கா குடும்பத்திற்கு தமிழிசை ஆறுதல்..! பாராட்டும் நெட்டிசன்கள் ..!

Published by
murugan

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கால்நடை மருத்துவர் பிரியங்கா மருத்துவமனையிலிருந்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரியங்கா.மீண்டும் அன்று மாலை கால்நடை ஒன்று அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை இதைத் தொடர்ந்து பிரியங்கா பெற்றோர் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இது தொடர்ந்து ரங்காரெட்டி மேம்பாலத்திற்கு கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் இருப்பதாக சாய் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பிரியங்கா குடும்பத்தினரிடம்  தகவல் கொடுத்து வரவைத்து அந்த உடலை அவர்களிடம் காட்டியுள்ளனர். அது பிரியங்கா என குடும்பத்தார்கள்  உறுதி செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட தெரியவந்தது.

இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் , கிளீனர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் உயிரிழந்த பிரியங்கா வீட்டிற்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் செல்லாத நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் பலர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டி வருகின்றனர்.பலர்  ஆறுதல் கூற செல்லாத சந்திரசேகர ராவ்வை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

23 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

31 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

1 hour ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

1 hour ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

14 hours ago