பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து, இவ்வழக்கை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.
இதனையடுத்து விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பது அவர் மூலமாக தெரிய வந்தது. இது குறித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட சில நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தியதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரித்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் தீபிகா படுகோனே. அவரிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது மூன்றுமுறை கண்ணீர் விட்டு அழுதார் என்றும், ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள், அழுது நாடகம் போடாமல் விசாரணைக்கு முழுதாக ஒத்துழைக்குமாறு தீபிகா படுகோனேவிடம் கண்டிப்புடன் கூறினார்கள் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…