முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் இருக்கிறார் என தெரிவித்தன நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அவரின் மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா ஸ்ரீ பிரணாப் முகர்ஜி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தவர் என தெரிவித்த அமித்ஷா, அவர் மிகவும் பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். பிரணாப் முகர்ஜீயின் புகழ்பெற்ற வாழ்க்கை, முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…