கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி.
டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட குறைந்த பாதிப்பு எண்ணிக்கை என டெல்லி அரசு தெரிவித்தள்ளது.
இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் இன்று டெல்லியின் மாயாபுரி பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைக்கு சென்ற போது சீனாவிடமிருந்து 6,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ததுள்ளதாக தெரிவித்தார். இது கொரோனா 3 வது அலையின் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சிலிண்டர்களை எச்.சி.எல் நன்கொடையாக வழங்கியதாகவும், இந்த சிலிண்டர்களை இறக்குமதி செய்ய உதவிய வெளியுறவு அமைச்சகத்திற்கும் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தனது நன்றியை தெறிவித்துள்ளார்.
மேலும் இந்த 6000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தி கூடுதலாக 3000 புதிய ஆக்ஸிஜன் படுக்கைகளை உருவாக்க முடியும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…