கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி.
டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட குறைந்த பாதிப்பு எண்ணிக்கை என டெல்லி அரசு தெரிவித்தள்ளது.
இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் இன்று டெல்லியின் மாயாபுரி பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைக்கு சென்ற போது சீனாவிடமிருந்து 6,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ததுள்ளதாக தெரிவித்தார். இது கொரோனா 3 வது அலையின் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சிலிண்டர்களை எச்.சி.எல் நன்கொடையாக வழங்கியதாகவும், இந்த சிலிண்டர்களை இறக்குமதி செய்ய உதவிய வெளியுறவு அமைச்சகத்திற்கும் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தனது நன்றியை தெறிவித்துள்ளார்.
மேலும் இந்த 6000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தி கூடுதலாக 3000 புதிய ஆக்ஸிஜன் படுக்கைகளை உருவாக்க முடியும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…