டெல்லி சிறுமி மரணம் : ராகுல் காந்தி புகைப்படங்களை பகிர்ந்ததால், ட்வீட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய NCPCR!

Published by
Rebekal

டெல்லியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்ததால் ட்விட்டருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று சிறுமியின் வீட்டுக்கு சென்று, அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் சிறுமியின் பெற்றோர் மற்றும் ராகுல் காந்தி காருக்குள் அமர்ந்து பேசிய போது எடுக்கப்பட்ட வண்ணம் இருந்தது. இதில் சிறுமியின் பெற்றோரின் முகம் தெளிவாக தெரிந்தாலும், அது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாலும் இந்த பதிவு குறித்து சர்ச்சை கிளம்பி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், போக்சோ சட்டத்தை மீறி பெற்றோரின் புகைப்படத்தைத் பதிவு செய்வதன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ராகுல் காந்திக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பி அந்த பதிவை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவர் சிறுமிகளின் அடையாளம் வெளிப்படுத்தக்கூடிய எந்த தகவல் அல்லது புகைப்படங்களையும் வெளியிடுவது சட்டவிரோதமானது எனவும் ட்விட்டருக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் ஒரு முறை எச்சரித்து நினைவு படுத்தி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago