ஒலிம்பிக்கில் இருமுறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட 5 வீரர்களுடன் மூத்த வீரரான சுசில்குமார் உள்ளிட்ட சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் படுகாயங்களுடன் சோனு மகால், ஆமித் ஆகிய இரு வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த வாகனங்களை சோதனை செய்ததில் ஏராளமான தடிகள் மற்றும் துப்பாக்கி ஆகியவை கிடைத்துள்ளது. இதனை அடுத்து மூத்த வீரர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் குமாரும் ஒருவர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாகியுள்ள சுசில்குமார் வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதால் சுஷில் குமாருக்கு டெல்லி காவல் நிலையத்தில் இருந்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்த பொழுது உயிரிழந்த இளம் வீரர் தங்கியிருந்தது ஒரு மூத்த மல்யுத்த வீரர் வீடு எனவும், இந்த வீட்டை காலி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட மோதல்தான் தற்பொழுது கொலையில் முடிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…