டெல்லியில் முதல் முறையாக 500 க்கும் கீழ் குறைந்தது கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் முழுஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்புகளை படிப்படியாக குறைத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறந்தவர்கள் 45 பேர் என உறுதிசெய்யப்பட்டள்ளது. தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் 8,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.61% ஆக குறைந்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து 4 வது நாளாக கொரோனா பாசிட்டிவ் ரேட் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், மேலும் இறப்பு விகிதம் 1.71% ஆகவும், மேலும் கொரோனாவால் தினசரி இறப்பு எண்ணிக்கை 100 க்கும் குறைவாகவும் பதிவாகியுள்ளது என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…