டெல்லியில் முதல் முறையாக 500 க்கும் கீழ் குறைந்தது கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் முழுஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்புகளை படிப்படியாக குறைத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறந்தவர்கள் 45 பேர் என உறுதிசெய்யப்பட்டள்ளது. தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் 8,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.61% ஆக குறைந்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து 4 வது நாளாக கொரோனா பாசிட்டிவ் ரேட் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், மேலும் இறப்பு விகிதம் 1.71% ஆகவும், மேலும் கொரோனாவால் தினசரி இறப்பு எண்ணிக்கை 100 க்கும் குறைவாகவும் பதிவாகியுள்ளது என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…