வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மத்தியில் பல வன்முறைகள் வெடித்தது.
இந்த வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் தனது கடைசி வீடியோவில் தீப் சிந்துவை ஆதரிக்குமாறு வலியுறுத்தினார். இதனை எதிர்த்து டெல்லி காவல்துறை விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறையில் சதிகாரர் என்று கூறப்படும் லக்கா சித்தானா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது.
லக்கா சித்தனா குறித்து காவல் துறையினர் கூறுகையில், டெலிகிராம் மற்றும் சிக்னல் பயன்பாடுகளில் வீடியோக்களை தனது ஆதரவாளர்களுக்கு அனுப்புகிறார் என்றும், பின் அதை தனது முகநூல் கணக்கிலும் பதிவேற்றுகிறார் என்று தெரிவித்துள்ளனர். இவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…