#DelhiElectionResults : முன்னிலை வகிக்கிறது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி ஆம்ஆத்மி, காங்கிர்ஸ், பாஜக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் போட்டியிட்டனர். இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை வெளியான தேர்தலின் கருத்துக்கணிப்பில் படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருதப்பட்டது. இந்நிலையில், 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில், ஆம்ஆத்மி கட்சி தற்போதையை நிலவரப்படி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் கூட முன்னிலை பெறவில்லை. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுமார் 1.47 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தினர். மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பாஜக 67 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதனிடையே 70 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 67 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது ஆம்ஆத்மி கட்சி அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானார். அப்போது பாஜகவுக்கு 3 இடங்களே கிடைத்தன என குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago